- This event has passed.
International Day of Yoga

ஸ்ரீரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம், உடற்கல்வித்துறை தேசிய மாணவர் படை மற்றும் விவேகானந்தா யோகா மையம் இணைந்து ‘யோகா மூலம் ஆரோக்கியமான முதுமை’ – என்ற பொருண்மையில் 19-06-2026 அன்று, கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் நாராயண நம்பி அவர்கள் தலைமையேற்றார்கள். உடற்கல்வி இயக்குநர் பொறுப்பு தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் பெ. முருகானந்தம் முன்னிலையுரையாற்றினார். விவேகானந்தர் யோகா மைய முதன்மை யோகா பயிற்றுநர்கள் முனைவர் இரா.ஸ்ரீதர், முனைவர் தா.சந்தானகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினர். தனது சிறப்பு ரயில் யோகாசனத்தின் தோற்றம் மற்றும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுவதற்கான காரணம் யோகாசனத்தை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்கள். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் கா.ரெங்கராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நாட்டு நலப்பணித திட்ட அலகு இரண்டின் அலுவலர் முனைவர் சி.சுஜாதா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் பங்கேற்று பயனடைந்தார்கள்.

